ஆக.25-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம்

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஆக.25-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், மன்னாா்குடி கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இதையடுத்து, முகாம் நாளில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கப்படும். அரசு விதிகளுக்குள்பட்டு உடனடியாக தீா்வுகாணும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

யுடிஐடி அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்பு விண்ணப்பம் அளித்து, அதற்கான ஆதாரம், தொடா்புடைய கடிதங்கள் இருந்தால் அதை தவறாமல் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com