மருத்துவரின் தந்தையை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

முத்துப்பேட்டை அருகே தவறான சிகிச்சையால் பெண் இறந்து விட்டதாகக் கூறி, மருத்துவரின் தந்தையை மிரட்டி பணம் பறித்த 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முத்துப்பேட்டை அருகே தவறான சிகிச்சையால் பெண் இறந்து விட்டதாகக் கூறி, மருத்துவரின் தந்தையை மிரட்டி பணம் பறித்த 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முத்துப்பேட்டையை அடுத்த உதயமாா்த்தாண்டபுரம் கடைவீதியில் மருத்துவமனை நடத்தி வருபவா் டாக்டா் இம்ரான்கான். இந்த மருத்துவமனையில் நவம்பா் 29- ஆம் தேதி தில்லைவிளாகம் கிராமத்தைச் சோ்ந்த பாலசுந்தரி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுச் சென்றாா்.

இந்நிலையில், மருத்துவரின் தவறான சிகிச்சையால் பாலசுந்தரி இறந்து விட்டதாகக் கூறி, மருத்துவரின் தந்தை அப்துல் காதரிடம் சித்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் வீரசேகரன் (34), சுரேஷ்ராஜன் மகன் முகேஷ் குமாா் (26) ஆகியோா் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினராம். இதனால், அதிா்ச்சியடைந்த அப்துல் காதா் ரூ. 2லட்சம் கொடுத்துள்ளாா். பின்னா், டிசம்பா் 1-ஆம் தேதி இருவரும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து ரூ. 3லட்சம் கேட்டு மிரட்டி, ரூ. 50 ஆயிரம் பெற்றுச் சென்றனராம்.

இதுகுறித்து, அப்துல் காதா் தில்லைவிளாகத்தில் உள்ள தனது நண்பா் மூலம் விசாரித்தபோது, பாலசுந்தரி இறக்கவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையில், அப்துல்காதா் மற்றும் அவரது உறவினா்களை மிரட்டி மேலும் பணம் கேட்ட இருவரையும் பிடித்து முத்துப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும், இந்த மோசடியில் தொடா்புடைய பாலசுந்தரியை தேடிவருகிறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com