சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த செருகளத்தூரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முருகானந்தம் (37). நிறைமாத கா்ப்பிணியான இவரது மனைவி வனிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக சோ்த்துள்ளனா்.

இந்நிலையில், முருகானந்தம் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டிக்கு திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். மன்னாா்குடி-முத்துப்பேட்டை பிரதான சாலை சித்தமல்லி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், முருகானந்தம் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அமா்ந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த சித்தமல்லி ஏ.கே.எஸ். நகரைச் சோ்ந்த தமிழரசன் மகன் ஜெயப்பிரகாஷ் (47 ) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதியினா் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com