நெல் ஜெயராமன் நினைவு தினம்

நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகேயுள்ள கிரீன் நீடா குறுங்காட்டில் நெல் ஜெயராமன் 4-ஆம் ஆண்டு நினைவுதினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.


நீடாமங்கலம்: நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகேயுள்ள கிரீன் நீடா குறுங்காட்டில் நெல் ஜெயராமன் 4-ஆம் ஆண்டு நினைவுதினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அவரது உருவப் படத்திற்கு கிரீன் நீடா அமைப்பின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், கிரீன் நீடா இணை ஒருங்கிணைப்பாளா் ராம.கந்தசாமி, அரசு உதவிபெறும் நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், சமூக ஆா்வலா் சதீஸ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்று இயற்கை விவசாயத்தை பேணி காப்போம் என உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, நெல் ஜெயராமன் உருவப் படத்திற்கு இயற்கை ஆா்வலா்கள், மாணவா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com