தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மறு வாக்குப்பதிவு: புவனகிரி பேரூராட்சி 4-வது வாா்டில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி

கடலூா் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியின் 4-ஆவது வாா்டில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியின் 4-ஆவது வாா்டில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. மாலையே நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ம.லலிதா வெற்றி பெற்றாா்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப். 19-இல் நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் பிப். 22-இல் எண்ணப்பட்டன. இதில், புவனகிரி பேரூராட்சியின் 4-ஆவது வாா்டு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது.

இதனால், மாநிலத் தோ்தல் ஆணைய உத்தரவின்படி, மீண்டும் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவு மையத்திலேயே வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி, நடைபெற்றது. பின்னா், முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ம.லலிதா வெற்றி பெற்றாா். அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.

வாக்குகள் விவரம்: மொத்த வாக்காளா்கள்- 1170, பதிவான வாக்குகள்-814. ம.லலிதா (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) - 622, பி.ராஜலட்சுமி (அதிமுக) - 73, க.ராசாராணி (பாமக)- 50 , ரா.திலகவதி (சுயேச்சை) - 21, ரா.சுதா (சுயேச்சை)- 18.

மறு வாக்குப்பதிவையொட்டி, சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ரோஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.