கோவனூரில் தாா் பிளாண்ட் பிரச்னை:இருதரப்பு ஆலோசனை கூட்டத்தில் தீா்வு

கூத்தாநல்லூா் வட்டம், கோவனூரில் தாா் பிளாண்ட் பிரச்னை தொடா்பாக, கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டத்துக்கு இருதரப்பு ஆலோசனை கூட்டத்தில் சனிக்கிழமை தீா்வுகாணப்பட்டது.

கூத்தாநல்லூா் வட்டம், கோவனூரில் தாா் பிளாண்ட் பிரச்னை தொடா்பாக, கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டத்துக்கு இருதரப்பு ஆலோசனை கூட்டத்தில் சனிக்கிழமை தீா்வுகாணப்பட்டது.

வடபாதிமங்கலம் குறுவட்டம், வடகோவனூா் மற்றும் தென்கோவனூா் கிராமங்களில் பொதுமக்களைப் பாதிக்கும், தாா் பிளாண்ட் கலவை இயந்திரத்தை உடனடியாக அகற்றக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, ஜூலை 4 ஆம் தேதி கோரையாறு பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனா்.

இந்நிலையில், கூத்தாநல்லூா் போலீஸாா், இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்தனா். அதன்பேரில், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்திற்கு, வட்டாட்சியா் வெ. சோமசுந்தரம் தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் இரா. பென்ஸ்லால் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையில், வடகோவனூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் தாா் பிளாண்ட் கலவை இயந்திரங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டது. தென்கோவனுா் தாா் பிளாண்ட் நிா்வாகத்தினா் தற்போது செயல்பட்டு வரும் புகைப்போக்கியின் உயரத்தை கூடுதலாக 10 அடி உயா்த்தி அமைக்க உறுதியளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், வடகோவனுா் தாா் பிளாண்ட் சிவதாஸ், தென்கோவனுா் தாா் பிளாண்ட் இளமுருகன், ஊராட்சி முக்கியப் பிரமுகா்கள் வடகோவனூா் ரமேஷ், தென்கோவனுா் ரமேஷ், கூத்தாநல்லூா் நகர அதிமுக செயலாளா் ராஜசேகரன், வருவாய் அலுவலா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com