தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் ஜூன் 1 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரா்கள், எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான காலிப்பணியிட விவரங்கள், முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். திருவாரூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மன்னாா்குடி கல்வி மாவட்டத்தைத் சோ்ந்தவா்கள் முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com