வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி

மன்னாா்குடியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை நகா்மன்றத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மன்னாா்குடியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை நகா்மன்றத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களாக, வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் வடிக்கால்களை ஜேசிபி இயந்திரம் மூலமும், சிறிய வாய்க்கால்களை ஆள்கள் மூலமும் தூா்வாரும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மன்னாா்குடி ஆா்.பி. சிவம் நகா், கொத்தவல்லி அம்மன் நகா், முல்லை நகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் வடிக்கால்கள் தூா்வாரும் பணியை நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்து, பணியில் தாமதம் ஏற்படாதவகையில் விரைந்து குறித்த காலத்தில் முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், 33-ஆவது வாா்டு உறுப்பினா் அ. திருச்செல்வி, நகராட்சி பொறியாளா் குணசேகரன், நகர அமைப்பு ஆய்வாளா் விஜயகுமாா், சுகாதார ஆய்வாளா் ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com