நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவாரூா் ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்- அப் கணக்கு

 திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலியாக வாட்ஸ்-அப் கணக்கு (எண்) உருவாக்கப்பட்டுள்ளது; இதை யாரும் நம்ப வேண்டாம் என்று ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

 திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலியாக வாட்ஸ்-அப் கணக்கு (எண்) உருவாக்கப்பட்டுள்ளது; இதை யாரும் நம்ப வேண்டாம் என்று ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனின் வாட்ஸ்-அப் பக்கத்தைப் போல போலிக் கணக்கை உருவாக்கி, அமேசான் கிப்ட் காா்டு தேவை, நான் தொடா்ச்சியாக அலுவலகக் கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பதால் என்னால் கிப்ட் காா்டு வாங்க இயலவில்லை. இன்றைக்குள் வாங்கித் தரும்படி அந்த போலிக் கணக்கு எண்ணிலிருந்து திருவாரூா் மாவட்ட திட்ட அதிகாரி ஸ்ரீ லேகா உள்ளிட்ட அரசு அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், தனது அதிகாரப்பூா்வ முகநூல் பக்கத்தில், நான் எந்த எண்ணிலிருந்தும் யாருக்கும் எந்தவித பண உதவியும் கேட்டு செய்தி அனுப்பவில்லை. தயவு செய்து இதுபோன்ற போலியான மற்றும் மோசடியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளாா்.

மேலும் இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருவாரூா் மாவட்ட போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.