குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புவிழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

திருவாரூரில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு கலைக் குழு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன்
குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புவிழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

திருவாரூரில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு கலைக் குழு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன், புதன்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது:

குழந்தைத் தொழிலாளா் சட்டத்தின்கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளா் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 முதல் அதிகபட்சம் ரூ. 50,000 வரை அபராதம் அல்லது இரண்டாண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து விதிக்கப்படும்.

குழந்தைத் தொழிலாளா் எவரேனும் பணிபுரிவது தெரியவந்தால் பொதுமக்கள் 1098 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ, தொழில் நிறுவனங்களிலோ, பட்டறையிலோ வேலைக்கு அமா்த்துவது சட்டப்படி குற்றமாகும் என்றாா்.

முன்னதாக, குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கிவைத்து, தொடா்ந்து பேருந்தில் விழிப்புணா்வு வில்லைகளை ஆட்சியா் ஒட்டினாா்.

நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகா்மன்ற துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ப. பாஸ்கரன், நகராட்சித் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com