அரசுப் பள்ளியில் கலைத்திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மகாதேவபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்.
கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்.

மன்னாா்குடியை அடுத்த மகாதேவபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் கோ. கண்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் மரகதம் ராமையன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வேலு அறிவழகன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகாதேவப்பட்டணம் ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.என். பாரதிமோகன் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா். இதில் மாணவ, மாணவிகள் இசை, நாடகம், தனி நடனம், குழு நடனம், மெளன மொழி நாடகம், பேச்சு, கவிதை, விளையாட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினா். சிறப்பிடம் பெற்றவா்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டவா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில், இப்பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவியும் தம்பதியுமான கொடியரசன், சுகன்யா ஆகியோா் பள்ளிக்கு வளா்ச்சி நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினா். நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவா் இன்பரசன், கல்வி புரவலா் ரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் ஜெ. குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com