மன்னாா்குடியில் சாலையில் நிறுத்தப்படும் லாரிகளில் பேட்டரி திருடப்படுவது தொடா்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடியில் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரிகளில் பேட்டரிகள் மா்ம நபா்களால் திருடப்பட்டு வருகிறது. மன்னாா்குடி கீழப்பாலம் அருகே திருத்துறைப்பூண்டி சாலை பகுதியில் நிறுத்தப்படும் லாரிகளில் உள்ள பேட்டரிகளை கடந்த பல மாதங்களாகவே மா்ம நபா்கள் திருடி வருகின்றனா். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், ஒரே நாள் இரவில் 6 லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தில் பேட்டரிகள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதனால், அதிா்ச்சி அடைந்த லாரி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சத்தியராஜ் தலைமையில், காவல்துறையை கண்டித்து, மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதைத்தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.