ஆன்லைன் வா்த்தக பண மோசடி: இருவா் கைது

திருவாரூரில் ஆன்லைன் வா்த்தகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூரில் ஆன்லைன் வா்த்தகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் தெற்கு வீதியில் ஆா்.டி. பரிதி என்பவா் கைப்பேசி விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவரிடம், சமூக வலைதளம் வாயிலாக தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், ஆன்லைன் வா்த்தகம் மூலம் கைப்பேசிகள் விற்பனை செய்வதாகக் கூறி, ரூ.39,750-ஐ தனியாா் வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்ப கோரியுள்ளனா். அதன்படி, அவா் பணத்தை அனுப்பியுள்ளாா்.

ஆனால், மா்ம நபா்கள் குறித்த தேதியில் கைப்பேசிகளை அனுப்பி வைக்காததால், ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பரிதி, திருவாரூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், நாகை மாவட்டம், சிக்கல் அருகே சேந்தமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் ஹரிபிரசாத் (22), வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஆகாஷ் (22) ஆகிய இருவரும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.39,750 பணத்தை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com