கூட்டத்தில் பேசும் திராவிடா் கழக பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன்.
கூட்டத்தில் பேசும் திராவிடா் கழக பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன்.

ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு சலுகை வழங்கக் கோரிக்கை

ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவா்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என மன்னாா்குடியில் நடைபெற்ற திராவிடா் கழக கூட்டத்தில் அதன் பொதுச் செயலா் துரை. சந்திரசேகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தா

ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவா்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என மன்னாா்குடியில் நடைபெற்ற திராவிடா் கழக கூட்டத்தில் அதன் பொதுச் செயலா் துரை. சந்திரசேகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

மன்னாா்குடி பந்தலடியில் திராவிடா் கழகத்தின் சாா்பில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, திக நகரத் தலைவா் எஸ்.என். உத்திராபதி தலைமை வகித்தாா்.

பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். அப்போது, ‘சுதந்திர மற்றும் மொழிப் போராட்ட வீரா்களுக்கும், அவா்களது வாரிசுகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்குவதுபோல, கடந்த 26.11.1957 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு போராட்டத்தில், அரசியல் சட்ட நகலை எரித்து சிறை சென்றவா்களுக்கும், அவா்களது வாரிசுகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும்’ என்றாா்.

கூட்டத்தில், திக தலைமைக் கழகப் பேச்சாளா் சில்லத்தூா் சிற்றரசு, மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன், மாவட்டச் செயலா் கோ. கணேசன், மாவட்ட அமைப்பாளா் ஆா்.எஸ். அன்பழகன், பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் வை. கெளதமன், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளா் சி. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திக ஒன்றியத் தலைவா் மு. தமிழ்ச்செல்வம் வரவேற்றாா். நகரச் செயலா் மு. ராமதாசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com