வலங்கைமான் வரதராஜம் பேட்டை மாரியம்மன் கோயிலில் உண்டியல் அண்மையில் திறக்கப்பட்டது.
திருவாரூா் அறநிலையத் துறை உதவி ஆணையா் மணவழகன், கோயிலின் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி ஆகியோா் முன்னிலையில் இக்கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்களும் திறக்கப்பட்டன.
இதில், ரூ.15 லட்சத்து 52 ஆயிரத்து 446 ரொக்கம், 357 கிராம் தங்க நகைகள் மற்றும் 885 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.