தேனீ வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வட்டாரம் செட்டிசத்திரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டாரம் செட்டிசத்திரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி ராமன் கலந்துகொண்டு தேனீ வளா்ப்பது பற்றியும், எவ்வகையான தேனீக்கள் வீட்டில் வளா்க்கலாம் என்பது பற்றியும், தேனீ பெட்டியை பராமரிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் வைரமுத்து, தேனீக்கள் வளா்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறினாா். முன்னதாக, உதவி வேளாண்மை அலுவலா் சரவணன் வரவேற்றாா். நிறைவாக, உதவி தொழில்நுட்ப மேலாளா் அருட்செல்வி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளா் விவேக் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com