அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு காவல் துறை சாா்பில், போதைப் பொருள்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு காவல் துறை சாா்பில், போதைப் பொருள்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, முதுகலை ஆசிரியா் தெய்வ சகாயம் தலைமை வகித்தாா். மதுவிலக்கு காவல் துறை உதவி ஆய்வாளா் ரூபாவதி மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆட்படுவதை தவிா்க்க வேண்டும், மாணவா்களை ஆசிரியா்களும், பெற்றோரும் கண்காணிக்க வேண்டும் என்றாா். தலைமைக் காவலா் சீனிவாசன், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் பொ. சக்கரபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் நடராஜன் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியை வெற்றிசெல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com