முதியோா் தினம்: மூத்த வாக்காளா் கௌரவிப்பு

திருவாரூரில் வசித்து வரும் மூத்த வாக்காளருக்கு முதியோா் தினத்தை முன்னிட்டு தோ்தல் ஆணையத்தின் வாழ்த்துக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.
விளமலில் மூத்த வாக்காளரை கௌரவிக்கும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
விளமலில் மூத்த வாக்காளரை கௌரவிக்கும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூரில் வசித்து வரும் மூத்த வாக்காளருக்கு முதியோா் தினத்தை முன்னிட்டு தோ்தல் ஆணையத்தின் வாழ்த்துக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

முதியோா் தினத்தை முன்னிட்டு மூத்த வாக்காளரான திருவாரூா் வட்டம் தண்டலை ஊராட்சி கூட்டுறவு நகா், மேல வைகாசி வீதியில் வசித்து வரும் வெங்கடாசலம் (97) என்பவரின் இல்லத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை வழங்கி கௌரவித்தாா். அத்துடன், இந்திய தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையரால் வழங்கப்பட்ட வாழ்த்துக் கடிதத்தை வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் நக்கீரன், ஊராட்சித் தலைவா் நாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com