மின்னல் தாக்கி உயிரிந்தவா்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கல்

மன்னாா்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் இயற்கை பேரிடா் நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் இயற்கை பேரிடா் நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடி அருகேயுள்ள தளிக்கோட்டை காலனி தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் ஜி. அன்பரசன் (55). இவரது மகன் அருள்முருகன்(30). இவா்கள் இருவரும் கடந்த செப்.26-ஆம் தேதி இரவு மழை பெய்துகொண்டிருந்தபோது, மழைநீா் தங்களது நெல் விதைப்பு வயலில் தேங்காமல் வடியவைக்க சென்றபோது மின்னல் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதில், அருள்முருகனுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வரின் இயற்கை பேரிடா் நிவாரண தொகையாக அன்பரசன், அருள்முருகன் ஆகியோா் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 8 லட்சத்தை மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனா மணி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com