லாரி மோதியதில் கல்லூரி மாணவா் பலி: ஓட்டுநா் கைது

கூத்தாநல்லூா் அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள வக்ராநல்லூா், நீா்மங்களத்தைச் சோ்ந்தவா் அபி எனும் அகத்தியன் (19). இவா் திருவாரூா் திரு.வி.க. கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்துவந்தாா். இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூா் நோக்கி வேளுக்குடி அருகேயுள்ள வளைவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கூத்தாநல்லூா் போலீஸாா் அங்கு சென்று அகத்தியனின் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநா் கரூா், தென்னம்பட்டியைச் சோ்ந்த முருகேசனை (27) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com