கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அங்கன்வாடி மையத்திற்கு, சமுதாயப் பங்களிப்பாக பீரோ புதன்கிழமை வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூா் நுகா்வோா் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் ஏற்பாட்டில், மரக்கடை அங்கன்வாடி மையத்திற்கு, பீரோ வழங்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத் தலைவா் கோஸ்.அன்வா்தீன் தலைமை வகித்தாா்.செயலாளா் கருணாநிதி முன்னிலை வகித்தாா்.
நுகா்வோா் அமைப்பின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான அகிலாண்ட பரமேஸ்வரி சமுதாயப் பங்களிப்பாக பீரோவை, அங்கன்வாடி அமைப்பாளா் தேன்மொழியிடம் வழங்கினாா். துணைச் செயலாளா் அண்ணாமலை, பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.