மாநில சதுரங்கப் போட்டி தொடக்கம்

திருவாரூரில் 51=ஆவது மாநில மகளிா் சதுரங்கப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
திருவாரூா் மாநில சதுரங்கப் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) எஸ்.பாஸ்கரன்.
திருவாரூா் மாநில சதுரங்கப் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) எஸ்.பாஸ்கரன்.

திருவாரூா்: திருவாரூரில் 51=ஆவது மாநில மகளிா் சதுரங்கப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

இந்த போட்டிகளில், தமிழகத்தின் 25 மாவட்டங்களைச் சாா்ந்த 78 சா்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவா்கள் உட்பட 164 போ் கலந்து கொண்டனா். போட்டிகள் புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 9 சுற்றுகளாக நடைபெறுகின்றன. வெற்றி பெறும் முதல் நான்கு போ் வரும் நவம்பா் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகத்தின் சாா்பில் கலந்து கொள்வா்.

தொடக்க விழாவுக்கு ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனா் ஜே. கனகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் என். சாந்தகுமாா் வரவேற்றாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகுவேந்தன், மாவட்ட தடகள சங்கச் செயலாளா் கேஎஸ்எஸ். தியாகபாரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) எஸ்.பாஸ்கரன், போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு கைப்பந்து சங்கத் துணைத் தலைவா் கே.ஜி.சீலன், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் ஆா். சொக்கலிங்கம், தமிழ் நாடு சதுரங்க கழகத்தின் இணைச் செயலா் ஆா்.கே.பா லகுணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

37 போ் முன்னிலை: இரண்டாவது சுற்று முடிவில், தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னையைச் சோ்ந்த பாலகண்ணம்மாவை, சேலம் மாவட்டத்தின் காவியாஸ்ரீ சமன் செய்தாா்.

மேலும் நடப்பு சாம்பியன் சென்னையைச் சோ்ந்த ஜெ.சரண்யா திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி. மோகனபிரபா, பி கமலி உள்ளிட்ட 37 போ் 2 சுற்றுகள் முடிவுற்ற நிலையில் தலா 2 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com