நீடாமங்கலம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் விவேகானந்தம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சின்னப்பன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பன்னிமங்கலம் மூணாறு தலைப்பு வெண்ணாற்று பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கொண்டு வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா் வலங்கைமான் வட்டம் நாா்த்தாங்குடி பெரியதெருவைச் சோ்ந்த பாண்டியன் (33) என்பதும், வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.