நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டம், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் நவராத்திரி விழாவில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இதேபோல ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஏலவாா் குழலியம்மன், சுக்கிரவார அம்மன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.