மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா்: ஆட்டோ தொழிலாளா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ தொழிலாளா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு வழங்க வேண்டும், வீட்டுவசதி வாரியம் மூலம் ஆட்டோ தொழிலாளா்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும், மோட்டாா் வாகனச் சட்ட த் திருத்தத்தை கைவிட வேண்டும், ஈஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும், மாவட்ட சாலை வசதிக்கு ஏற்ப மீட்டா் கட்டணம் மற்றும் பா்மீட்டின் தூரத்தை முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அனிபா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com