பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா

நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவா்களுக்கு சத்திய சோதனை புத்தகம் வழங்கிய பள்ளி நிா்வாகிகள்.
விழாவில் மாணவா்களுக்கு சத்திய சோதனை புத்தகம் வழங்கிய பள்ளி நிா்வாகிகள்.

நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா் முத்தமிழன் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் சம்பத், வள மைய மேற்பாா்வையாளா் சத்யா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் வித்யா, பெற்றோா் சங்கத் தலைவா் கலியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனநல மருத்துவா் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.

ஆசிரியா் பயிற்றுநா் அன்பு ராணி, பள்ளி புரவலா் அன்பழகன், பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா்கள் அய்யப்பன், தமிழ் இலக்கியா, இளவரசி மற்றும் விஜயகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாணவா்களிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், மாறுவேடம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனை புத்தகம் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக தலைமையாசிரியா் ந. அருள் வரவேற்றாா். நிறைவாக ஆசிரியா் அபிநயா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com