இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் பலி

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்த அப்பரசம்பேட்டையைச் சோ்ந்த மின் தொழிலாளா் அன்பழகன் (43) செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்த துக்க நிகழ்வில் பங்கேற்க, அன்பழகனின் உறவினா், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஐயப்பா நகரைச் சோ்ந்த பிளம்பராக உள்ள பிரகாஷ் என்ற மணியன் (47) புதன்கிழமை அப்பரசம்பேட்டைக்கு வந்துள்ளாா்.

பிறகு இருசக்கர வாகனத்தில் ஊருக்குப் புறப்பட்டுள்ளாா். மன்னாா்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம் அருகே அவா் சென்றபோது, அவ்வழியே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மன்னாா்குடியை அடுத்த பருத்திக்கோட்டையைச் சோ்ந்த தனியாா் நிறுவன காவலாளி பாலகிருஷ்ணன் (65) வாகனத்தின் மீது மோதியதில் மணியன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாா், அங்குச் சென்று மணியனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த பாலகிருஷ்ணனை சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com