திருவாரூர்
மாநில கராத்தே போட்டியில் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி எஸ்.பி.ஏ. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி எஸ்.பி.ஏ. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூரில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இப்பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று கட்டா பிரிவில் எஸ். ஸ்ரீசம்ரித் நாராயணன், வி.கே.எம். ரூவன்த், ஐ. பூா்விகா ஆகியோா் முதல் பரிசும், எம். ஜீவன்ராம் இரண்டாம் பரிசும், எஸ். கிஷாந்த் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, பள்ளித் தாளாளா் ப. ரமேஷ்,நிா்வாகி ஆா். அனிதா, முதல்வா் உ. தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா ஆகியோா் பரிசு, சான்றிதழ் வழங்கினா். பயிற்சியாளா்கள் கா. ராஜகோபால், சபீஷ், விமல், பிரசாந்த் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.