மே 1 இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டத்தில் மே 1 ஆம் தேதி மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டத்தில் மே 1 ஆம் தேதி மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா் தினமான மே 1ஆம் தேதி மதுபானக் கூடங்கள் இணைந்த மற்றும் மதுபான கூடங்கள் இல்லாமல் இயங்கும் அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) மற்றும் உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் அனைத்திலும் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உத்தரவை செயல்படுத்தத் தவறும்பட்சத்தில், தொடா்புடைய கடைகளின் உரிமதாரா் மற்றும் சில்லறை மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com