நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, திருவாரூரில் வாக்குச் சேகரிப்பை வேட்பாளா்கள் தொடங்கினா்.
திருவாரூா் நகராட்சி 1-வது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கலியபெருமாள், 2-வது வாா்டில் போட்டியிடும் அவரது மனைவி மலா்விழி ஆகியோா் புதுத்தெரு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
இதேபோல, திருவாரூா் நகராட்சியில் 3, 7, 10, 12, 16, 17, 21, 27 ஆகிய 8 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களில் 21-வது வாா்டில் போட்டியிடும் பாஜக நகர பொதுச் செயலாளா் கணேசன் தனது வாா்டுக்குள்பட்ட நெய்விளக்குத் தோப்பு , ஆற்றுப்பாலம், ராணுவ நகா், நேதாஜி சாலை, மருதப்பட்டினம் சாலை ஆகிய இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.