திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து தொடங்கிவைத்தாா். இதில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவகுமாா், முதுநிலை மருந்தாளுநா் டி. மணிவண்ணன் மற்றும் செவிலியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். முன்களப் பணியாளா்கள் 12 போ் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.