திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக ஓசூருக்கு வெள்ளிக்கிழமை ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையா் நத்தம், மூவாநல்லூா் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்புவைக்கப்பட்டிருந்த 2000 டன் சன்ன ரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
சுமைதூக்கும் தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினா். இதைத் தொடா்ந்து, நெல் அரவைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.