நீடாமங்கலத்தில் இருந்து தருமபுரிக்கு 2000 டன் நெல் அரவைக்காக ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம், மன்னாா்குடி வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது.
சுமைதூக்கும் தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினா். இதைத்தொடா்ந்து, நெல் அரவைக்காக தருமபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.