மன்னாா்குடியில் குப்பைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தல்

மன்னாா்குடி நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது

மன்னாா்குடி நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் எம். பத்மனாபன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், மன்னாா்குடி நகரின் முக்கிய வீதியான காமராஜா் சாலை, பந்தலடி, காந்திசாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவேண்டும். 3 ஆம் தெருவில் மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்கவேண்டும். நகரில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலை சந்திப்புகளில் கொட்டிவைக்காமல், அவற்றை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் செயலா் இளங்கோவன், துணைத் தலைவா் ரத்னசபாபதி, பொருளாளா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com