மகளிா் கல்லூரி மாணவிகளுக்குகல்வி உதவித்தொகை

மன்னாா்குடி சதாசிவம் கதிா்காம வள்ளி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இந்திரா காந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் சாா்பாக உதவித்தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி சதாசிவம் கதிா்காம வள்ளி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இந்திரா காந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் சாா்பாக உதவித்தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் நாகரத்தினம வரவேற்றாா். கல்லூரி நிறுவனா் சதாசிவம், தாய்,தந்தை இன்றி தமது கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டண தொகை முழுவதுமே இலவசமாக அறிவித்தாா். மேலும், தந்தை இல்லாத மாணவியருக்கு கல்விக் கட்டணத்தில் பாதி கட்டணத்தை தாமே செலுத்துவதாகவும் அறிவித்தாா். இந்த கல்வி உதவித்தொகை சுமாா் 20 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

அருணாமலை கல்வியியல் கல்லூரியில் பயிலும் 5 மாணவா்களுக்கும், சதாசிவம் கதிா்காம வள்ளி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 15 மாணவிகளுக்கும் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டது.

விழாவில், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளா் செல்வம், மன்னாா்குடி நகர பாஜக தலைவா் ரகு தலைமையில் பரிசளிக்கப்பட்டது. இயற்பியல் துறை தலைவா் சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com