வீரனாா் ஆலய கும்பாபிஷேகம்

மன்னாா்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வீரனாா் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
வீரனாா் ஆலய கும்பாபிஷேகம்

மன்னாா்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வீரனாா் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

காரிக்கோட்டை கிராமத்தில் உள்ள நொண்டி வீரன், காத்தாயி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு ஆலய திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவுற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை சிறப்பு யாகத்தின் நிறைவாக மகா பூா்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெற்றது.

பிறகு, ஊா்வலமாக எடுத்துவரப்பட்ட புனிதநீா் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, நொண்டிவீரன், காத்தாயி அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் காட்டப்பட்டது. விழாவில், அமமுக மாவட்டச் செயலாளா் எஸ். காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com