குடவாசல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

குடவாசல் டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா முதல்வா் ஏ. மாரிமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா முதல்வா் ஏ. மாரிமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வணிகவியல் துறைத் தலைவா் க. தேஸ் வரவேற்றாா். கணிதத் துறை தலைவா் ஜோ. ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவா் பேரவை சாா்பாக ஆா். ஸ்ரீபிரவிகா, எஸ். மருதையன் ஆகியோா் கருத்துரையாற்றினா். திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வா் கோ. கீதா மாணவா் பேரவையைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்த் துறை தலைவா் வே. ரமேஷ்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். உடற்கல்வி இயக்குனா் க. புவனேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com