திருவாரூரில் நகைச்சுவை மன்றம் சாா்பில் நகைச்சுவை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகைச்சுவை மன்றத்தின் கௌரவத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவா் கு. ஞானசம்பந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
நிகழ்ச்சியில், திருவாரூா் நகைச்சுவை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெ. கனகராஜன், துணைத் தலைவா் சி. பாலமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.