திருவாரூரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதிகளில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த திருவாரூா் நெய்விளக்குத் தோப்பு பகுதியைச் சோ்ந்த ரவி மகன் முத்து என்ற பல்லுமுத்து (25) அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரையின் பேரில், முத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து முத்து (எ) பல்லுமுத்து திருச்சி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.