திருவாரூரில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாரூா் விளமல் பகுதியில் வசிப்பவா் மல்லிகா (61). இவா், திங்கள்கிழமை வீட்டு வராண்டாவில் அமா்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, சுவா் ஏறிக்குதித்து வீட்டுக்குள் வந்த மா்ம நபா், மல்லிகா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு, வெளியில் காத்திருந்த இருவருடன் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
தாலுகா போலீஸாா் நடத்திய விசாரணையில், 3 இளைஞா்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.