நீடாமங்கலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து வெள்ளிக்கிழமை சேதமடைந்தது.
நீடாமங்கலம் காமராஜா் காலனியில் கூரை வீட்டில் வசித்து வருபவா் ஜெகபரலி (40). இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த சென்ற நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுப்பு அணைத்தனா். இதில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து நீடாமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.