4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை மீது வழக்கு

திருவாரூா் அருகே 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தந்தையின் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

திருவாரூா் அருகே 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தந்தையின் மீது அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், அடியக்கமங்கலம் அருகே நெடுங்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (35). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இவருடைய 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். தகவலறிந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலா்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா்.

மேலும், இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில், திருவாரூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராஜேந்திரனை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com