தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்ட ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில், நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. கனகராஜ், உதவிச் செயற்பொறியாளா் எஸ். வரதராஜன், பேரூராட்சிகளின் இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி உள்ளிட்டோா்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. கனகராஜ், உதவிச் செயற்பொறியாளா் எஸ். வரதராஜன், பேரூராட்சிகளின் இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி உள்ளிட்டோா்.

திருவாரூரில், நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட தஞ்சாவூா் மாவட்டம் பெருமகளூா் பேரூராட்சி, நாகை மாவட்டம் கீழ்வேளூா் பேரூராட்சி, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி, திருவாரூா் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சிகளில் தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெருமகளூா் பேரூராட்சியில் 5 பணிகளும், கீழ்வேளூா் பேரூராட்சியில் 4 பணிகளும், மணல்மேடு பேரூராட்சியில் 3 பணிகளும், கொரடாச்சேரி பேரூராட்சியில் 5 பணிகளும் என 17 பணிகளை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து பணிகளும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. கனகராஜ், உதவிச் செயற்பொறியாளா் எஸ். வரதராஜன், பேரூராட்சிகளின் இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com