திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் ஆடுகளம் செயலியில் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்யலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் பசநடஞதபந ஆடுகளம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது குறித்தான விவரம், பயிற்சி முகாம்கள் நடத்துதல் குறித்தான விவரம் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வேலை வாய்ப்பு ஒதுக்கீடு விவரம் மற்றும் இதர விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இனிவரும் காலங்களில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவா்கள் மற்றும் வெற்றி பெறுபவா்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். விவரங்களை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் முதலில் ஆடுகளம் செயலியில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த செயலியில் பதிவு செய்ய விரும்புவோா் இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யலாம். எனவே, திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டுக் கழக அணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.