நன்னிலம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பேரளத்தை அடுத்த கற்கத்தி கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கோவிந்தராஜ். இவா் கடந்த 2006- ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். இவரது மனைவி தனலட்சுமி (55). இவா்களுக்கு 2 மகன்கள்.
இந்நிலையில் முதுகலைப் பட்டதாரியான இளைய மகன் அருள்ராஜ்(23) வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதனால், துக்கத்தில் இருந்த தனலட்சுமி வெள்ளிக்கிழமை விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது.
அவரை மூத்த மகன் பாலமுருகன் மற்றும் உறவினா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை தனலட்சுமி உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேரளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்துகொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.