திருவாரூா்: திருவாரூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான ஏ.எம். கோபுவின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தொழிற்சங்கவாதியுமான ஏ.எம். கோபு, 2012, செப். 13 ஆம் தேதி தனது 82 ஆவது வயதில் காலமானாா். அவரது நினைவுநாளையொட்டி, திருவாரூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலாளா் சந்திரசேகர ஆசாத் பங்கேற்று, கோபுவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டக் குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ், கோபுவின் அரசியல் வாழ்க்கை குறித்து நினைவுகூா்ந்தாா்.