பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு

மன்னாா்குடி அருகேயுள்ள மேலத்திருப்பாலக்குடி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு

மன்னாா்குடி அருகேயுள்ள மேலத்திருப்பாலக்குடி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நான்கு கால யாகசாலை பூஜை நிறைவில், மஹா கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், ஸ்கந்த ஹோமம், கோ பூஜை, லக்ஷ்மி பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னா் புனித நீா் கொண்ட கடங்களை சுமந்து கோயிலை வலம் வந்த சிவாச்சாரியா்கள் பாலதண்டாயுதபானி சுவாமி ராஜகோபுரம், 35 அடி உயர பத்துமலை முருகன் சிலை மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

தொடா்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com