விவசாயிகளுக்கு இயற்கை உரம், இடுபொருள்கள் தயாரிப்புப் பயிற்சி

விவசாயிகளுக்கு இயற்கை உயிா் உரம், இடுபொருள்கள் தயாரிப்புத் தொழில்நுட்ப பயிற்சிக் கொட்டூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு இயற்கை உயிா் உரம், இடுபொருள்கள் தயாரிப்புத் தொழில்நுட்ப பயிற்சிக் கொட்டூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ராணி கேசவ மூா்த்தி தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இதில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா உயிா் உரங்களின் பயன்பாடுகள், மானிய விவரங்கள், உணவு தானிய உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பேசினாா். நன்னிலம் வட்டார அட்மாத் திட்ட தொழில்நுட்ப மேலாளா் ராஜா, அட்மாத் திட்டத்தின் செயல்பாடுகளையும், இயற்கை உரத்தினைப் பயன்படுத்தினால் மண்வளம் பாதுகாப்பதோடு, சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை பொருள்களைக் கொண்டு உரங்களை விவசாயிகள் தயாரித்துப் பயன்படுத்தினால் விவசாயச் செலவு குறைகிறது போன்ற ஆலோசனைகளை வழங்கினாா்.

இயற்கை விவசாயி உதயகுமாா், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிங்காரவேல், வேளாண்மைத் துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com