வள்ளலாா் நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) டாஸ்மாக் கடைகள் இயங்காது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளலாா் நினைவுதினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சாா்ந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில், தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் மதுக்கூடங்களின் ஏலதாரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.