நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.